மனச்சோர்வு நோய்
மனச்சோர்வு நோயுள்ளவர்கள் , அவர் சார்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக .
நம்மில் பலருக்கும் அவ்வப்பொழுது மனச்சோர்வு ஏற்பட்டு சில மணி நேரமோ அல்லது சில தினங்களோ இருந்து விட்டு நம்மை அறியாமலே நீங்கி விடும்.
ஆனால் மனச்சோர்வு நோய் உள்ளவர்களுக்கு இத்தகைய உணர்வு பல வாரங்கள் மற்றும் மாதங்கள் நீடிக்கும். இதனால் அவர்களின் தினசரி வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை மற்றும் அலுவலக வேலை எல்லாமே பாதிப்படையும்.
மனச்சோர்வு நோய்க்கான அறிகுறிகள்:
- எப்பொழுதும் சோகமாக இருத்தல்.
- வாழ்க்கை மேல் பிடிப்பு இல்லாமை .
- எதிலும் நாட்டம் மற்றும் மகிழ்ச்சி இல்லாமை.
- சிறு விசயங்களில் கூட முடிவு எடுக்க முடியாத நிலை.
- முன்பு எளிதாக செய்த வேலைகளை கூட செய்ய முடியாத நிலை.
- எப்பொழுதும் உடல் சோர்வாக இருத்தல்.
- மனம் அமைதி இல்லாமல் சஞ்சலத்துடன் இருத்தல்.
- பசியின்மை. அதனால் உடல் எடை குறைதல். சிலருக்கு அதிகமான பசி மற்றும் உடல் எடை கூடுதல் இருக்கலாம்
- தூக்கமின்மை. (தூக்கம் வருவதிற்கு அதிக நேரம் பிடிப்பது, முழு தூக்கம் கிடைக்காமல் அதிகாலை வேளைகளில் விழித்தல், முழு திருப்தி தராத தூக்கம் )
- தாம்பத்திய உறவில் நாட்டமின்மை.
- தன்னம்பிக்கை இல்லாமை, தாழ்வு மனப்பான்மை, எதிர்காலத்தை பற்றிய வெறுமையான உணர்வு, எளிதில் எரிச்சல் அடைதல், நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திக்கும் ஆர்வம் குறைந்து தனிமையை நாடுதல்.
- வாழ்வதில் நாட்டமில்லாமல் தற்கொலை எண்ணம் மிகுதல், அதற்குரிய முயற்சிகளை செய்தல்.
- தலைவலி மற்றும் உடம்பு முழுவதும் வலி, குடைச்சல் மனச்சோர்வு நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
- உங்களுக்கு மனச்சோர்வு நோய் உள்ளது என்பதை அறியவே பல வாரங்களோ அல்லது மாதங்களோ ஆகலாம்.
நீங்கள் அறிவதற்கு முன்பே , உங்கள் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள், (உங்கள் நடத்தையில் உள்ள மாற்றங்களை அறிந்து கொண்டு ) இதனை உங்களிடம் தெரிவிக்கும் நிலை வரலாம்.
மனச்சோர்வு நோய் எதனால், ஏற்படுகிறது?
நம்மை மனதளவில் பாதிக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் மன உளைச்சல் உருவாக்கும் விஷயங்கள் தான் மனச்சோர்வு நோய் உருவாவதற்கு காரணமாகிறது.
மனச்சோர்வுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள்:
குடும்ப சூழ்நிலைகளினால் ஏற்படும் பாதிப்பு. ( குடும்ப உறவில் சச்சரவு, மணவாழ்க்கையில் பிரச்னை, பணபிரச்சனை அலுவலகம் மற்றும் நண்பர்களுடன் பிரச்னை)
சிலவகையான உடல்நலகேடுகள் (தை ராய்ட் நோய் பாதிப்பு , வைரஸ் நோய்கள் தாக்குதலக்கு பின், புற்று நோய் பாதிப்புக்கு பின்னால், மாரடைப்புக்கு பிறகு, மூளை பாதிப்புகள்), மனச்சோர்வு நோய் ஏற்படலாம் .
மேலே குறிப்பிட்டவை சில உதாரணங்களே .
குடும்ப சூழ்நிலைகளினால் ஏற்படும் பாதிப்பு. ( குடும்ப உறவில் சச்சரவு, மணவாழ்க்கையில் பிரச்னை, பணபிரச்சனை அலுவலகம் மற்றும் நண்பர்களுடன் பிரச்னை இவையாவும் இதில் அடங்கலாம் )
மேலே குறிப்பிட்டவை சில உதாரணங்களே .
மரபு வழியாகவும் மனச்சோர்வு நோய் வரலாம் . இதனால் சில குடும்பங்களில் அதிக பேருக்கு மனச்சோர்வு நோய் இருப்பதை காணலாம்.
குடிபழக்கம் அல்லது போதை பழக்கம் உள்ளவர்களுக்கு மனச்சோர்வு நோய் அதிகமாக வரலாம்.
மனச்சோர்வு நோய் உள்ளவர்கள் அதனை வெளியில் யாரிடமும் சொல்ல முடியாத நிலையில் மது பழக்கத்துக்கும் போதை பொருள் உபயோகத்திற்கும் அடிமை ஆவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளன.
ஆண்களை விட பெண்களை இந்த நோய் அதிகமாக பாதிக்கும்.
சில வகையான உடல் உபாதைகள் கூட மனச்சோர்வு நோயை உண்டாக்கும்.
சில நேரங்களில் எந்த விதமான மன உளைச்சலோ அல்லது உடல் உபாதைகளோ இல்லாத நேரத்திலும் மன சோர்வு நோய் உண்டாகலாம்
முன் பதிவிற்கு
உங்கள் பிரச்சினைகளைப் பொறுத்து, உங்கள் தேவைகளுக்கு எந்த ஆலோசனை மிகவும் பொருத்தமானது என்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உங்கள் பிரச்சினைகளைப் பார்த்து தீர்வு காண விவாதிக்க எங்களை ஏன் கேட்கக்கூடாது?
உங்களின் சந்தேகங்களுக்கு உடனே அழையுங்கள்
முன் பதிவிற்கு